• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

July 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, பூங்கா, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில் சுற்றுப்பகுதி மற்றும் கடை வீதி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்யேகமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக வங்கிகள் மூலம் மாதத்தவணை ரூ.946 வீதம் 12 மாதங்களுக்கு திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 9550 சாலையோர வியாபாரிகள் பயன் பெற்றுள்ளனர். தகுதியுள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரும் 16ம் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் அலைபேசி எண்- 99449 48878 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தி முடித்தவர்கள் ரூ.20 ஆயிரம் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க