• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை – மதுசூதனன்

April 3, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக கட்சி பிளவுப்பட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைதேர்தல் நடக்கவிருக்கிறது. அத்தொகுதியில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக டிடிவி. தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக மதுசுதனன் போட்டியிடுகின்றனர். தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசுதனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை மின் விளக்கு சின்னம் இரட்டை இலை சின்னம் போல் சித்தரிக்கப்படுவதாக மதுசூதனன் மீது தினகரன் தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுசுதனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அவர் பதில் கடிதம் ஒன்றை திங்கள்கிழமை(ஏப்ரல் 3) கொடுத்தார். தான் இரட்டை மின் விளக்கை தவறாக பயன்படுத்தவில்லை. ஆனால் டிடிவி. தினகரன் அதிமுக கட்சி பெயரையும் சமுக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தையும் பயன்ப்படுத்தி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க