• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுமியை பலாத்காரம் செய்தவர், உடந்தையாக இருந்த இருவர் அனைவருக்கும் 10 ஆண்டு சிறை

March 28, 2023 தண்டோரா குழு

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா(வயது 30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் மீது கோவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜோஸ்வாவிற்கு ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோஸ்வா அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜோஸ்வா அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோவையில் இருந்து கடத்தி சென்றார். அந்த சிறுமியை கடத்துவதற்கு ஜோஸ்வாவின் நண்பர் சீனிவாசன் (31) மற்றும் ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இந்த நிலையில் சிறுமியை காணததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஜோஸ்வா என்பது தெரியவந்தது. அன்னூரில் பதுங்கி இருந்த ஜோஸ்வாவிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக ஜோஸ்வா, அவருக்கு உதவிய சீனிவாசன், ராசுகுட்டி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜோஸ்வா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ராசுகுட்டி, சீனிவாசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க