• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஏராக்குறை பகுதியில் சுமார் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு

July 18, 2022 தண்டோரா குழு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஏராக்குறை பகுதியில் சுமார் 8 மாத குட்டி யானை வாயில் ரத்தத்துடன் உயிரிழப்பு.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வேடர் காலனியை ஒட்டியுள்ள ஏராக்குறை பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அப்பகுதியில் வாயில் ரத்தத்துடன் சுமார் 8 மாத குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் இறந்து கிடந்த யானையின் உடலை மீட்டனர். மேலும்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார்,உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் மாவட்ட வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார்,சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் கூறுகையில்,

பிரேத பரிசோதனை முடிவிலேயே யானை இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளார். கோவையில் தொடர்ந்து கடந்த சில மாதங்களில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க