• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சில்லி பன்னீரில் ஆணுறை கலந்து வந்ததால் அதிர்ச்சியடைந்த பெண்.

April 20, 2016 தண்டோரா குழு.

அதி வேகமாகச் செல்லும் உலகத்தில் தற்போது உணவு செய்து சாப்பிடும் பழக்கம் மாறி எதற்கெடுத்தாலும் விடுதியில் வாங்கி உண்ணும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. இதற்காகவே பல நிறுவனங்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் அந்த உணவை ஆர்டர் கொடுத்தவருக்குக் கொண்டுவந்து சேர்க்க ஒரு சில நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வேகத்தில் சுத்தம் சுகாதாரம் என்பது ஒரு கேள்விக்குறியாக மாறிவருகிறது.

உத்தரகாண்ட மாநிலத்தில் தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தனக்கு ஒரு சில்லி பன்னீரும் ஸ்ப்ரிங் ரோல் தோசாவும் ஆர்டர் கொடுத்தார். பின்னர் அந்த உணவு வந்தவுடன் பிரித்து பார்த்தபோது அதில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை இருந்துள்ளது.

இதையடுத்து கொண்டுவந்து கொடுத்த நபரை அழைத்துக் கேட்டபோது எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். மேலும் அந்த நிறுவனமும் எங்களுக்குக் கொடுத்த ஆர்டரை டெலிவரி செய்வதுதான் வேலை மற்றபடி பேக்கிங் செய்வது எல்லாம் உணவு நிறுவனத்தின் வேலை எனத் தட்டிக்களித்துள்ளனர்.

மேலும் உணவு நிறுவனமோ நாங்கள் சூடாக கொடுத்து சுமார் 40 நிமிடங்கள் கழித்துத்தான் அவர் பிரித்து பார்த்துள்ளார். அப்படி எனில் அந்த பிளாஸ்டிக் உருகியிருக்கும் ஆனால் அது முழு உருவத்துடன் இருப்பது உள்நோக்கத்தைக் கற்பிப்பதாக உள்ளது எனத் தப்பித்துக்கொண்டது.

ஆனால் இதுவரை இதற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் டெலிவரி செய்த நபர் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க