• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவராத்திரி பூண்டி மலை ஏற்றத்துக்கு வனத்துறையினர் பணம் வசூலிப்பதில் பக்தர்கள் அதிர்ச்சி

February 28, 2022 தண்டோரா குழு

தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது இங்கு உள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள ஆறாவது மலைகளை கடந்து ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவரே ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சித்ரா பவுர்ணமி சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி வருவதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வருகின்றனர் இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை ஆனாலும் மலையேறும் பக்தர்களுக்கு அவர்களிடம் வனத்துறையினர் சார்பாக ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதனால் அதற்கு ரசீது கொடுப்பது இல்லை இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெள்ளிகிரிமலை வரும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் பின்பற்றும் முறையே அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலோனோர் சிவபக்தர் என்பதால் அவர்களிடம் பணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க