• Download mobile app
05 Oct 2024, SaturdayEdition - 3160
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுந்தராபுரம் சிஎஸ்ஐ ஆலய வெள்ளிவிழாவில் 25 பார்வையற்றோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கல்

October 2, 2024 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய வெள்ளிவிழாவில் பார்வையற்றோர் 25 பேருக்கு இலவச தையல் எந்திரங்களை பேராயர் திமோத்தி ரவீந்தர் வழங்கினார்.

கோவை சுந்தராபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தின் வெள்ளிவிழா& 25வது ஆலய பிரதிஷ்டை ஆராதனை நிகழ்ச்சி நேற்று (2ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சிகள் பிரேயர், வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது.

சிஎஸ்ஐ பேராயர் திமோத்தி ரவீந்தர், பேராயரம்மா ஆனி ரவீந்தர் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினர். இந்த விழாவில் சிறப்பு பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.பைபிள் வினாடிவினா, பாடல் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

விழாவில் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் பார்வையற்றோர் 25 பேருக்கு இலவசமாக தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.அவற்றை பேராயர் திமோத்தி ரவீந்தர்,பேராயரம்மா ஆனி ரவீந்தர் ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் சிஎஸ்ஐ கோவை திருமண்டல துணைத் தலைவர் ஆயர் எல்.டேவிட் பர்னபாஸ், செயலாளர் பாதிரியார் எஸ்.பிரின்ஸ் கால்வின், பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய திருமண்டல உறுப்பினர்கள் ஜே.ஏ.பரமானந்தம், எஸ்.என்.ஜேக்கப், ஆல்வின் மற்றும் பாதிரியார் (ஓய்வு) ஸ்டான்லி ஜெயசீலன், நிர்மலா அருள்ராஜ் (ஐயரம்மா), திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய செயலாளர் ஜி.பாக்கியசெல்வன், பொருளாளர் பி.காட்வின், போதக சேகர குழு உறுப்பினர்கள் ஜெபகிங், ஆடம் அப்பாதுரை, குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

வெள்ளிவிழா ஏற்பாடுகளை ஆலய ஆயர் மற்றும் தலைவர் பாதிரியார் வி.கே.சுரேஷ்குமார், செயலாளர் டி.எஸ்.டேனியல், பொருளாளர் எல்.டேவிட்சன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க