• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட 6 பேர் ராஜ்ய சபாவிற்கு பரிந்துரை.

April 22, 2016 தண்டோரா குழு

ராஜ்யசபாவில் மொத்தம் 12 நியமன எம்பிக்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் ஓய்வுபெற்றும், விலகியும் சென்றனர்.

இதையடுத்து மொத்தம் காலியாக உள்ள 7 இடங்களுக்குப் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, குத்துச்சண்டை வீரர் மேரி கொம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகிய 6 பேர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் உள்ள ஒரு இடத்திற்கு ஹிந்தி நடிகர் அனுபம்கேரை நியமிப்பதா அல்லது பத்திரிக்கையாளர் ரஜத் சர்மாவைப் பரிந்துரைப்பதா என்ற குழப்பத்தில் இன்னும் பரிந்துரைக்காமல் உள்ளனர்.

இதில் சித்துவை திடீரென சேர்த்தது, அவரை ஆம் ஆத்மி பார்ட்டியினர் தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் எனக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மேலும் படிக்க