• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்

June 28, 2017 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிபதிகள் சுவாமிநாதன், ஜெகதீஸ் சந்திரா, பவானி சுப்பராயன், தண்டபாணி, அப்துல் குத்தூஸ், ஆதிகேசவலு ஆகியோர் புதிய நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு ஒரு சிலரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பட்டன.இதனையடுத்து ஜனாதிபதி அவர்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.தற்போது 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க