• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை-குமரி கடலோர வழியாக இருப்புப்பாதை அமைக்க நடவடிக்கை: ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு

June 24, 2017 தண்டோரா குழு

சென்னை – கன்னியாகுமரி இடையே கடலோர இருப்பு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.

அப்போது பேசிய அவர், சென்னை – கன்னியாகுமரி இடையே கடலோர இருப்பு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் மட்டும் இந்த பாதை அமைக்க முடியாது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வேளச்சேரி – பரங்கிமலை ரயில்பாதை பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்றார்.

விழாவில் சென்னை -திருவொற்றியூர் இடையிலான 4ஆவது ரயில் பாதையை அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் கருத்துரு வந்த பின்னர், இது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார்.

மேலும் படிக்க