• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் ரயில்வே கோட்டம் அபராதமாக ரூ.14.65 கோடி வசூல் !

March 9, 2023 தண்டோரா குழு

சேலம் ரயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அபராதமாக ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4.90 கோடி அதிகமாகும். சதவீதத்தின் அடிப்படையில் 50.33 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறுகையில்,

‘‘ 2022-23 ஏப்ரல் – பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 1,90,202 டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.13,35,58,969- வசூலித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 14.19 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 40.60 சதவீதம் அதிகமாகும்.

மேலும், 2022-23 ஏப்ரல் – பிப்ரவரி மாதங்களில் 25397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1,26,26,990- வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 530.82 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 531.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும்.

53 ஆயிரத்து 598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறைகேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.14,65,10,717- ஆகும், இது 2021-22 ஏப்ரல் – பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 50.33 சதவீதம் அதிகமாகும்,’’ என்றார்.

மேலும் படிக்க