June 28, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செய்யது பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமாக 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், செய்யது பீடி கிளை நிறுவனம், செய்யது டிரேடிங், செய்யது ஹோம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன கிளைகளில் சோதனை நடைபெறுகிறது.
அதைப்போல் நெல்லையில் உள்ள செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான வீடு,கிடங்கு உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 20 வாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நெல்லையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.