June 20, 2017
தண்டோரா குழு
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமலுக்கு வரவுள்ளது. இதனை அமல்படுத்தும் விதமாக ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் எனவும் ஜூலை 1-ம் தேதி 12.10 மணி வரை இக்கூட்டம் நடைபெறும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் உரையாற்றுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலத்திலும் ஜி.எஸ்.டி நிறைவேற்றபடும் என்றார்.இந்த விழாவிற்கு மாநில முதல்வர்களுக்கு, நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.