• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரத்தில் சுரங்க பாதை

June 8, 2022

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடக்க பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இதைத்தவிர்க்க, முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுரங்க பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பல்வேறு பணிகள் ரூ.1500 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுடன், சுரங்கபாதையும் அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க