• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடையால் பெண்கள் குழந்தைக்ளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்

April 18, 2022 தண்டோரா குழு

கோவையில் பொது இடத்தில் உள்ளா டாஸ்மாக் கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் என்று மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சுந்தராபுரம் சாரதாமில் சாலையில் மதுபான கடை எண் 1756 செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடைக்கு எதிரில் திரையரங்கம் உள்ளது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த இடத்தில் மது கடையும் இருப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது.இந்த பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த மதுக்கடையை அகற்றக்கோரி திமுக.,வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.ஆனால் தற்போது அமைதி காக்கின்றனர்.எனவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க