• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது

June 8, 2017 தண்டோரா குழு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

தனியார் தொலைக்காட்சிக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாகவும், கோடநாடு எஸ்டேட் போலி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டது தொடர்பாகவும் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி சசிகலா, டிடிவி தினகரன்,பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை 1996-ம் ஆண்டு 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2015-ம் ஆண்டு சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக்கிலிருந்தும் அவர்களை விடுவித்து எழுப்பூர் நிதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்யப்பட்டது.

அதன்படி டிடிவி தினகரன் மீதான 2 வழக்கு விசாரணையும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இன்று ஆஜரான தினகரன் மீது கோடநாடு எஸ்டேட் பங்களாவை போலி நிறுவனங்கள் மூலம் வாங்க முயன்றதாக கூறி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க