April 25, 2017
தண்டோரா குழு
டிடிவி தினகரன் யார் என்று எனக்கு தெரியாது என்று தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சுகேஷ் சந்திரசேகர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில்,டிடிவி தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.