• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் ரூ.122 கோடி செலவு செய்துள்ளதாக புகார்

April 5, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா கட்சியை சார்ந்த டி.டி.வி. தினகரன் ரூ.122 கோடி செலவு செய்துள்ளார் என்று அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா கட்சினர் புகார் கூறியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா கட்சியினர் பணபட்டுவாட செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில்

“சென்னை ஆர்.கே.நகரில் ஆளும் கட்சிக்கும் தேர்தல் ஆணையதிற்கும் இடையில் தான் போட்டி நடக்கிறது. தொகுதியில் பணப்படுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது.

பணப்பட்டுவாடா செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து பாதிவழியில் விட்டுவிடுகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ரூ.122 கோடியை செலவு செய்துள்ளார்.”

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க