• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்கள் மகன்கள் மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளதாக பெற்றோர்கள் மனு

August 3, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டதாக கூறி ஆர்.எஸ்.புரம் போலிசார் ஒரு வட மாநில நபரையும் அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் இரத்தினபுரி காவல்துறையினர் 1 நபரையும் கைது செய்தனர்.

மேலும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் தொடர்பு உள்ளதாக கூறி இரத்தினபுரி, டாடாபாத் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மீது ஜூலை 30ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் மீது இரத்தினபுரி போலிசார் பொய்யாக கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யந்துள்ளதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

தங்கள் மகனுக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், காவல்துறை முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கேட்டு கொண்டனர்.

மேலும் படிக்க