January 28, 2017
தண்டோரா குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை, ஞாயிற்றுக்கிழமை முதல் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
“வங்கக் கடலில், மன்னார் வளைகுடா அருகில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குமரி கடல் அருகே சனிக்கிழமை நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் அதிகபட்சமாக பம்பான் பகுதியில் 13 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 11 செ. மீ. மழையும் பதிவாகியுள்ளது”
இவ்வாறு அவர் கூறினார்.