• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டம்

April 12, 2017 தண்டோரா குழு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை சிவானந்த காலணி பகுதியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தின் போது இரத்தத்தில் கைரேகையிடும் நூதன போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஒரு மாதமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் செய்ய வேண்டுமெனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க