August 10, 2017
தண்டோரா குழு
தமிழருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சிக்கிய முருகனுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுத்ததலால் அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் “இதன் மூலம் மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது போன்ற செயல் மிகவும் கொடூரமான செயல். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டங்களில் திருத்தங்களை அமல்படுத்துவோம்,” என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரினார்.