• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மேற்கூரையில் சோலார் சாதனம் நிறுவப்படுவதை துரிதமாக்க ‘வீட்டுக்கு வீடு சோலார் என்ற திட்டம் டாடா பவர் தொடக்கம்

October 17, 2024 தண்டோரா குழு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகவும் மற்றும் டாடா பவரின் துணை நிறுவனமாகவும் இயங்கி வரும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட், அதன் பிரபலமான ‘வீட்டுக்கு வீடு சோலார் , டாடா பவர் கீ சங்’ என்ற முன்னெடுப்பு திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதன் மூலம் விரிவாக்கம் செய்யப்படுவதை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம்,கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதன் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து,இந்த முன்னெடுப்பானது இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு நிலையான மற்றும் எளிதாக கிடைக்கும் சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,இதன் மூலம் தூய்மையான ஆற்றல் தீர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் பெறுவதற்கு இது உதவுகிறது.

கோவையில் நடைபெற்ற இந்த தொடக்க விழா நிகழ்வில்,டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரவீர் சின்ஹா,மற்றும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட்-இன் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபேஷ் நந்தா மற்றும் மூத்த உயரதிகாரிகள் மற்றும் கூட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூய்மையான ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காக மாநிலம் முழுவதிலும் 42 சேனல் பார்ட்னர்களின் ஆதரவோடு இந்த திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் & நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரவீர் சின்ஹா இது குறித்து கூறியதாவது:

”தமிழ்நாட்டில் எங்களது வீட்டுக்கு வீடு சோலார் முன்னெடுப்பு திட்டத்தின் அறிமுகமானது இல்லங்களில் மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் தீர்வுகளின் வழியாக தூய்மையான மற்றும் வலுவான மின்சக்தி தயாரிக்கப்படுவதிலும், பயன்படுத்தப்படுவதிலும் ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் சாதனங்களின் வழியாக தங்களது மின்சார பயன்பாட்டிற்காக செலவிடப்படும் தொகைகளை பெரிதும் குறைக்க முடியும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மக்கள் பரவலாக பயன்படுத்துவதை மாநில அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.பிரதம மந்திரி சூர்ய கர் யோஜனா திட்டத்தின் வழியாக, 1 கிலோ வாட் சோலார் சாதனத்திற்கு ரூபாய்.30,000,2 கிலோ வாட் க்கு ரூபாய்.60,000 மற்றும் 3 முதல் 10 கிலோ வாட் வரையிலான சோலார் சாதனங்களை நிறுவுவதற்கு ரூபாய்.78,000 என அரசு வழங்கும் மானியத்தொகை மூலம் குடியிருப்பாளர்கள் பயனடையலாம். அரசு வழங்கும் இந்த ஊக்கத்தொகைகள், சூரிய மின்சக்திக்கு மாறுவதற்கான செலவை வெகுவாகக் குறைக்கின்றன, இதனால் வீட்டு உரிமையாளர்கள் தூய்மையான ஆற்றலான சூரிய ஒளி மின் சக்தியை தாங்களே தயாரித்து சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சோலார் சாதனங்களை வீட்டு மேற்கூரைகளில் நிறுவுவதற்காக அரசால் வழங்கப்படும் இந்த மானியத் தொகைகளுக்கும் கூடுதலாக, நிகர மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அளவிடுவதற்கான மீட்டர்களும் இத்திட்டத்தில் பொருத்தப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்திக்கு கிரெடிட்களை பெற்று பயனடையலாம். இந்த கிரெடிட்களை எதிர்கால மின்சார பில்களின் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாதாந்திர மின்கட்டண செலவுகளை குறைக்கலாம் மற்றும் சோலார் சாதனங்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து கிடைக்கும் சேமிப்பை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க