• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24ம் ஆண்டு உலகத் தாய்மொழி நாள் பேரணி

February 22, 2023 தண்டோரா குழு

தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24ம் ஆண்டு உலகத் தாய்மொழி நாள் பேரணி கோவையில் நடைபெற்றது.

கடந்த 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகத் தாய்மொழி நாளாக கொண்டாட அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் இன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24ம் ஆண்டு உலக தாய்மொழி நாள் பேரணி கோவையில் இன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,மற்றும் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சுப்பிரமணியம் தலைமை ஏற்று நடத்தினர். இந்தப் பேரணியை சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் தொடங்கி வைத்தார்.இந்தப் பேரணியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்கள், பல்வேறு தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் துவங்கிய இந்த பேரணியானது, வஉசி மைதானம் வழியாக சென்று நேரு விளையாட்டு அரங்கில் முடிவடைகிறது.இக்கூட்டமைப்பின் சார்பில் இதற்கு முன்னதாக கோவை, தஞ்சை, சிங்கப்பூர் மலேசியா ஆகிய பல்வேறு இடங்களில் உலகத் தாய்மொழி நாள் பேரணி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க