• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தற்கொலை செய்யும் முன் பேஸ்புக்கில் லைவ் செய்த மாணவர் !

April 4, 2017 தண்டோரா குழு

19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மும்பை மாணவர், தற்கொலைக்கு முன் பேஸ்புக் லைவில் தனது தற்கொலை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான இவர், மும்பையில் இருக்கும் தனியார் கல்லூரியில், பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். இவரது பெயர் அர்ஜுன் பரத்வாஜ்.

மும்பையில் இருக்கும் தனியார் விடுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில், பேஸ்புக் லைவின் மூலம் தற்கொலை செய்வது எப்படி என்று பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை லைவ் வீடியோவை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று மும்பை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தற்கொலை செய்துகொண்ட அர்ஜுன் பரத்வாஜ் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், தேர்வுகளில் தொடர்ச்சியான தோல்வியால் மன உளைச்சலில் இப்படிச் செய்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க