June 12, 2017
தண்டோரா குழு
தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய தலைநகர் தில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் உள்ள தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷன் அலுவலகர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.