• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாமாக பார்க்கிங் செய்து கொள்ளும் நாற்காலிகள்.

April 23, 2016 தண்டோரா குழு

பொதுவாக ஒரு அலுவலகத்தில் கூட்டம் நடப்பது வாடிக்கையான ஒன்று தான்.

ஒரு அறையில் நடைபெறும் கூட்டம் முடிந்த பிறகு, நாற்காலிகளைச் சரியான இடத்தில் வைத்து அறையை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகள் ஒருவருக்கு அசதியை ஏற்படுத்துகிறது.

ஆனால் கைதட்டுதல் மூலம் நாற்காலியை ஒழுங்குபடுத்தும் புதிய வழியை ஜப்பான்னில் ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இவ்வகை நாற்காலிகள் ஒரு கைதட்டல் மூலம் தங்கள் நிலைக்குத் திரும்பி செல்லும் புதிய திட்டத்தை ஜப்பானில் உள்ள நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொழில் நுட்பம் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் இயங்க வல்லது. கூட்டம் ஆரம்பிக்கும் முன் உள்ள நிலையை ஆராயும் அந்த கேமரா பின்னர் கூட்டம் நடந்து முடிந்தபின் அதே போன்ற வரிசையில் அடுக்க மென்பொருள் ஒன்றை வடிவமைத்து அதை சேரின் சக்கரம் போன்ற அமைப்பில் இணைத்துள்ளனர்.

பின்னர் கூட்டம் முடிந்து செல்லும்போது ஒரு கைதட்டல் தட்டினால் அந்த சேர்கள் அதனுடைய இடத்தில் தானாக சென்று சேர்ந்து விடும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் வைபை மூலம் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இனி நிர்வாகக் கூட்டம் முடிந்து இருக்கைகளை அடுக்கும் வேலை மிச்சம் எனப் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இவை அனைத்துமே மனிதனைச் சோம்பேறியாக்கும் நடவடிக்கையாகத்தான் உள்ளது.

மேலும் படிக்க