• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு அழைப்பு

August 15, 2017 தண்டோரா குழு

திருவாரூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. இதனிடையே வரும் 19-ம் தேதி திருவாரூரில் தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான விழா அழைப்பிதழில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்.,களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில், திருவாரூர் எம்.எல்.ஏ., திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மாட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க