• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் வாலிபர் கொடூரமாக குத்திகொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

June 9, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ராயபுரம். நகரின் மையப்பகுதில் அமைந்துள்ள பிரதான ஓட்டல் அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது கிடைத்த ஓட்டுனர் உரிமத்தில் இறந்தவர் பெயர் ஹரீஸ் என்றும், திருப்பூரை அடுத்த இடுவம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.மேலும் ஹரீக்ஷை கத்தியால் குத்திகொலை செய்ததும் தெரியவந்தது.

நள்ளிரவில் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டு முற்றிய நிலையில் ஹரீக்ஷை ஓடஓட விரட்டி கத்தியால் குத்தி கொடூரமாக தாகுதலுக்குள்ளாகி இறந்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி பின்னர் திரும்ப வந்தது.

முன் விரோதம் காரணமா அல்லது பெண் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹரீக்ஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிக முள்ள இப்பகுதியில் வாலிபர் கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிச் சென்ற சம்பவம் பொது மக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க