• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துறையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி செயல்படுவது குறித்தான நிகழ்ச்சி

March 25, 2023 தண்டோரா குழு

துறையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி செயல்படுவது குறித்தான நிகழ்ச்சி காவல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் எவ்வாறு தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியுடன் செயல்படுவது என்பது குறித்தான நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என காவலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க