• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலுங்கான காவலருக்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது

April 7, 2017 தண்டோரா குழு

தெலுங்கான மாகாணத்தின் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் காவலர் குக்குக்டாபு ஸ்ரீனிவாசலு என்பவருக்கு புதுதில்லியில் சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.தெலுங்கான மாகாணத்தின் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்படுவதற்கு முன், பெங்களூரில் பணியாற்றி வந்தார் அவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றவாளிகள் இருவரை பிடிக்க சென்ற போது குற்றாவாளிகள் அவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.எனினும் அவர்களை பிடிக்க தனது வாகனத்தில் அவர் விரைந்துள்ளார்.

பல மணி நேரத்திற்கு பிறகு அந்த குற்றவாளியை மடக்கி பிடித்துள்ளார். ஆனால், மீண்டும் தப்பிக்க முயன்ற குற்றவாளி ஸ்ரீனிவாசலுவை தாக்கியுள்ளான். பலத்த காயமடைந்த அவர், தனது காயங்களை பெரிதாக எண்ணாமல், குற்றவாளி தப்பி செல்லக்கூடாது என்று போராடினார். இறுதியில், குற்றவாளியை கைது செய்து, பெங்களூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் குற்றவாளியை கொண்டு வந்ததை கண்ட காவல்துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர். பிறகு, ஸ்ரீனிவாசலுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.அவருடைய வீர செயலை பாராட்டி, புதுதில்லியில் வியாழக்கிழமை(ஏப்ரல் 6) அவருக்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க