• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய கொடி தலைகீழாக பறக்கவிட்ட ஓட்டுனர் பணியிடை நீக்கம்

June 21, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி முதல்வரின் காரில் உள்ள தேசிய கொடி தலைகீழாக பறக்கவிட்ட ஓட்டுநரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து புதுச்சேரி மூத்த அதிகாரி கூறுகையில்,

“புதுச்சேரியின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மூன்று நாள் தங்கி, மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்துவிட்டு புதுதில்லி இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து புதுச்சேரி வர திட்டமிட்டிருந்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரி செல்லும் முன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி தனது காரில் பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடி தலைகீழாக பறப்பதைப் பார்த்துள்ளார்.அப்போது, காரின் முன்பு வைக்கப்பட்டு இருந்த தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரே காரில் இருந்து இறங்கி தேசியக் கொடியை சரியாக வைத்தார்.

இதனால் கோபம் அடைந்த அவர், புதுச்சேரி வந்ததும் முதல் வேலையாக தனது கார் ஓட்டுநர் இப்ராகிம் என்பவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டார்” என்று கூறினார்.

மேலும் படிக்க