• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிர் ஆணையத்தின் கடிதங்களுக்கு காவல்துறை பதில் அளிப்பது இல்லை – ரேகா ஷர்மா

May 17, 2017 தண்டோரா குழு

தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லை என ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருதினங்களாக தேசிய மகளிர் ஆணையம் சார்பாக “மகிளா ஜன சன்வை” பெண்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா கலந்துக்கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் மகளிர் நலன் மற்றும் வழக்குகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காவல்துறையினரே காரணம்.பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்காமல் இருக்கும் காவல்துறையினர் மீது தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லைஎனவும் ரேகா ஷர்மா தெரிவித்தார்.

மேலும், இந்திய அளவில் கெளரவ கொலைகள் தொடர்பான புகார்கள் ஹரியானா மாநிலத்தில் இருந்து அதிகளவு வருவதாகவும் வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்மாநிலங்களில் குறைந்த அளவே பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க