• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் அறிவிப்பு எதிரொலி, குறைந்தது மூங்கில் தடுப்பு விற்பனை.

March 15, 2016 வெங்கி சதீஷ்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மூங்கில் வளையங்களைப் பார்த்தபோது ரம்மியமாக இருந்தது. அது குறித்து விசாரிக்கச் சென்ற போதுதான் அதில் இருந்த ஒரு சோகமும் புரியவந்தது.

பரம்பரை பரம்பரையாக மூங்கில் தொழில் செய்து வரும் வெங்கடேஷ் என்பவரைச் சந்தித்த போது அவர் தான் முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூங்கில் தட்டிகள் செய்து வந்ததாகவும், ஆனால் நாளடைவில் துடியலூருக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

சமீப காலமாக தனக்கு மூங்கில் மூலம் செய்யப்பட்ட புதிய செடிகளுக்கான தடுப்பு அதிகளவு விற்பனையானது எனவும் அதுவும் குறிப்பாக தலைவர்கள் பிறந்தநாள் முதல் அனைத்து நாட்களுக்கும் மரக்கன்று நடுவது ஒரு பேஷனாக இருந்தது.

அதனால் அந்த மரக்கன்றைச் சுற்றி மறைப்பு வைக்க எங்களது பிரம்பால் செய்யப்பட்ட மறைப்பை வாங்கிச்சென்றனர். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் தலைவர்கள் யாரும் விழா எடுக்கக்கூடாது என நடைமுறை உள்ளது.

எனவே எங்களுக்குச் செடி மறைப்பு தட்டி விற்பனை குறைந்தது. ஆனால் தற்போது வெயில் அதிகளவு இருப்பதால் மூங்கிலால் செய்யப்படும் திரை மறைப்பை வாங்கிச்செல்கின்றனர். அதன் மூலம் காற்று குளிர்ச்சியாக வரும்.

ஆனால் மழை நீரோ வெயிலோ வர வாய்ப்பே இல்லை. அதனால் அதிகளவில் தற்போது மூங்கில் திரைகள் அதிகளவில் விற்பனையாகிறது. அதன் மூலம் வருவாய் குறைவு சரிசெய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க