• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் வெற்றி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது – மோடி

March 11, 2017 தண்டோரா குழு

“உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாயின. அதில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் சனிக்கிழமை கூறுகையில், “பா.ஜ.க. மீதான மக்கள் நம்பிக்கைக்கும், மக்கள் தரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்த மாபெரும் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அளித்துள்ள அளவிளான ஆதரவால் உவகை அடைந்தேன். இளைஞர்கள் அளித்துள்ள பேராதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் மோடி.

மேலும் படிக்க