• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேவைப்படும் போது எங்களின் பலத்தை நிருபிப்போம் – டிடிவி தினகரன்

August 18, 2017 தண்டோரா குழு

எங்களின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாகக் கூற முடியாது. தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அவர் சந்தித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஏற்கதக்கது. ஆனால், சிலர் தங்களது பதவியைக் காப்பாற்ற இணைக்க முயல்கின்றனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்தால் தான், பல்வேறு தரப்பினர் வைக்கும் புகார்களுக்கு விடை கிடைத்து, சசிகலா குற்றமற்றவர் என்பது வெளிப்படும்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு இல்லமாக மாற்றுவது தவறில்லை. ஆனால், அது அவசர கதியில் இல்லாமல் தொண்டர்களின், பொது மக்களின் கோரிக்கை ஏற்ப இருக்க வேண்டும். முதல்வரின் இந்த அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன் கட்சியை காப்பாற்ற நடவடிக்கைகள் இருக்கும். எங்களின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாக கூற முடியாது. தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க