• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொண்டர்களால் ‘பாகுபலி’யான புதுச்சேரி முதல்வர்!

May 24, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்கள் அவரை பாகுபலி போல் சித்தரித்து பேனர்கள் வைத்துள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என்றால் தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் தன் தலைவருக்கு பேனர் வைப்பது என்றால் ஒருவருக்கு ஒருவர் போட்டி கொண்டு தான் வைப்பார்கள்.

அப்படி அரசியல் தலைவர்களின் அதிரடி பேனர்களுக்கு பெயர் பெற்றது புதுச்சேரி.வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை யார் வீட்டு விசேஷமானாலும் புதுச்சேரி முழுவதும் பேனர்கள் வைத்து அமர்களப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக பிரபல திரைப்படங்களின் போஸ்டர்களில் சில கட்டிங், ஒட்டிங் வேலை பார்த்து அலப்பறை கொடுப்பார்கள் தொண்டர்கள்.

அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் பாகுபலி புகழ் பாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்கள் சிலர் அவரை போல் சித்தரித்து பேனர்கள் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க