• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொண்டாமுத்தூருக்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

August 4, 2017 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூரில் தொடங்க இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின் அமைச்சர் தெரிவிக்கையில்,

“தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) தொடங்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.எனவே தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் மேலும் இந்த கல்வி ஆண்டிலேயே தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

மேலும் படிக்க