• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகைக்கடையின் கூரையை உடைத்து திருட்டு

June 13, 2017 தண்டோரா குழு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் நகைக்கடையில் கூரையை உடைத்து சுமார் 40 சவரன் வரை தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் நகைக்கடை வைத்திருப்பவர் துரைராஜ், இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது நகைக்கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை மற்றும் உள்ளிருந்த சட்டர் உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் கம்மல், மூக்குத்தி, செயின், வளையல் உள்ளிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடையின் கூரையை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க