• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்க கடன் அனைத்தும் தீர்ந்தது என விஷால் தெரிவித்துள்ளார்.

April 21, 2016 தண்டோரா குழு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான பாண்டவர் அணி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கிருந்த அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையில் 8 கோடி ரூபாய் நிதி இருப்பதாகவும் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து வரும் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் 24-ஆம் தேதி சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, அக்கூட்டத்தில் நடிகர் சிம்பு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் நட்சத்திர கிரிக்கெட் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க