• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்க கட்டடம் கட்ட இடைக்காலத் தடை விதிப்பு – உயர் நீதிமன்றம்

May 6, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க கட்டடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்திரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 31ம் தேதி, நடந்தது. இதில் ரஜினி உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், பொதுசாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த குற்றச்சாட்டிற்கு நடிகர் சங்கம் மற்றும் கார்ப்பரேஷன் துறையினர் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, நடிகர் சங்க கட்டடத்தை ஆய்வு செய்ய ஆணையரை நியமனம் செய்தார். மேலும் நடிகர் சங்க கட்டடத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க