May 23, 2017
தண்டோரா குழு
செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் அவரகளுக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.