• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்பிக்கை வாக்கெடுப்பு காணொளியை ஸ்டாலினிடம் கொடுக்க உத்தரவு

March 10, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான காணொளியைத் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்குமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்குதல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதில் எந்த விதி மீறலும் இல்லை. ரகசிய முறையில்தான் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பேரவை விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.

“சட்டப் பேரவைச் செயலர் கொடுத்த பதில் மனு குறித்து திமுக கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், “அங்கு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சம்பந்தமான காணொளியை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க