• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல்லது நடக்க வேண்டும் என விரும்புகிற இடத்தில் நான் இருப்பேன் – சிம்பு

March 31, 2017 தண்டோரா குழு

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். இதில் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து செங்கலை தொட்டு வணங்கி வைத்தனர்.

விழாவில் மூத்த நடிகர்கள் சிவக்குமார், விஜயக்குமார் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தற்போது தலைமையில் இருக்கும் அணிக்கு எதிராக தேர்தலின்போது பல கருத்துக்களை முன்வைத்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு இவ்விழாவில் கலந்து கொண்டது தான்.

விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சிம்பு ” இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் எங்கள் கடின உழைப்பின் அடையாளம். நல்லது நடக்க வேண்டும் என விரும்புகிற இடத்தில் நான் இருப்பேன்” என விளக்கமும் அளித்துள்ளார்.

மேலும் படிக்க