• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல் வினை தலை காக்கும், தீ வினை கால் எடுக்குமோ?

April 26, 2016 தண்டோரா குழு

தாவூத் இப்ரஹிம் இந்தியாவால் மிகவும் தேடப்படும் நிழல் உலக தாதா. இவர் கராச்சியில் கிளிவ்டன்ரோட்டில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்.

ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் , தாவூத் தங்களது நாட்டிலேயே இல்லை என்று மறுக்கிறது.

1993 ம் ஆண்டு பல நிரபராதிகளின் உயிரையும் ,வாழ்க்கையும் பலி கொண்ட மும்பை தாக்குதலுக்கு முழு முதல் பொறுப்பு இந்த தாதாதான் .இன்னும் பல நிழல் உலக அராஜகங்களுக்கும் உத்தரவாதி இந்த மனிதர் தான்.

இப்பொழுது ஆட்டம் அடங்கும் நேரம் போலும்.இவர் காங்கரீன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்தத்தின் ஓட்டம் சீராக இல்லா விட்டாலும், இரத்த அழுத்தம்

அதிகமாக இருந்தாலும்,இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்திருந்தாலும், இந்நிலை ஏற்படலாம் என்பது கருத்து. உடலிலுள்ள திசுக்கள் விரைவாக மடியும் என்றும் கூறுகிறார்கள். விரல்கள், கணுக்கால், முதலியவை முதலில் பதிக்கப்படுமாம்.

இந்த காரணங்களினால் தாதாவின் இரு கால்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அவரது நிழலும், வலது கையுமான சோட்டா ஷகீல் இவை அனைத்தும் உண்மை அல்ல என்றும், தாவூதின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க