• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநிலம் முழுதும் நான்காவது நாளாக தொடரும் போராட்டங்கள்

January 20, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் 5-வது நாளாகவும், சென்னை, நெல்லை, கோவை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் 4-வது நாளாகவும் மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவுகள் பெருகி கொண்டே வருகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மக்கள் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மெரீனா கடற்கரைக்கு வருகின்றனர். “அடையாள அட்டை வேண்டாம் அடையாளம்தான் வேண்டும்” (ஜல்லிக்கட்டுதான் வேண்டும், அரசாங்க அடையாள அட்டைகள் வேண்டாம்) என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே போல் கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள், மக்கள் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரை கலைந்து செல்ல மாட்டோம்” என அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். அங்கு திங்கட்கிழமை முதல் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். “ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்“ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதே போல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. “ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படும. போராட்டங்களைக் கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் வரை போராட்டங்கள் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க