• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாய்க்குப் பாடம் கற்பிக்க எட்டு குட்டி நாய்களைக் கொன்ற பெண்.

March 22, 2016 முகமது ஆஷிக்

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் முன்னாள் இராணுவத்தினர் குடியிருப்பு உள்ளது. அங்கு பொன்னம்மா என்பவர் வீட்டின் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கால்வாயில் குட்டிகளை ஈன்றதற்கு கோபடைந்த பொன்னம்மா, தாய் நாய்க்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகப் பிறந்து 15 நாட்களே ஆன நாய்க்குட்டிகளைக் கற்களால் அடித்துக் கொன்றுள்ளார்.

இதில் எட்டு குட்டிகளில் 7 குட்டிகள் உடனே இறந்துள்ளது. மற்றொன்று அடுத்த நாள் இறந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தொண்டு நிறுவன உதவியுடன் பொன்னம்மா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இறந்த குட்டிகளையும் அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், பொன்னாம்மாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதையடுத்து பொன்னாம்மாவின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. பொன்னம்மா, முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் உத்தரகாண்டில் எம்எல்ஏ ஒருவர் குதிரையின் காலை உடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பெங்களூருவில் பெண்ணொருவர் நாய்க்குட்டிகளைக் கொடூரமாக கொன்றிருப்பது விலங்கு நல ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குட்டிகள் இறந்து 5 நாட்கள் ஆகியும் அதை அடக்கம் செய்த இடத்தில் தாய் நாய் வந்து பார்த்து சென்று வருவது பார்ப்போரை மனம் கலங்க வைத்துள்ளது.

மேலும் படிக்க