• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிதி நிறுவன மோசடி; இழந்த தொகையை பெற்று தர கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் தீவிரம்

February 9, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் யுடிஎஸ் என்ற நிதி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதல் சில வாரங்களுக்கு

வட்டித் தொகை வழங்கப்பட்டது. பின்னா் வட்டி தராமலும், டெபாசிட் செய்த தொகையைத் திரும்ப தராமலும் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து இந்நிறுவனத்தின் பல கிளைகள் மூடப்பட்டன.இதைத் தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

விசாரணையில் இந்நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கு பல மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. மேலும் இந்நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் ரூ.90 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகையை செலுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க