• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிகரிக்கும் எம்.பி க்கள்

February 12, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரும் அ.தி.மு.க. எம்.பி.,க்கள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

முதன் முதலாக மைத்ரேயன் எம்.பி ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்.அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை ஆர். சுந்தரம் (நாமக்கல்), மற்றும் அசோக்குமார் (கிருஷ்ணகிரி) மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.சனிக்கிழமை இரவு மக்களவை உறுப்பினர்கள் வனரோஜா மற்றும் சத்யபாமா ஆகியோரும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுகிழமை காலையில் வேலூர், தூத்துக்குடி , பெரம்பலூர் மக்களவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை மதியம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் எம்.பி., ராஜேந்திரன் எம்.பி., ஆகியோர் பன்னீர்செல்வம் அணியில் தங்களை இணைத்து கொண்டனர். இதனையடுத்து எம்.பி.,க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து லட்சுமணனை நீக்கி அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதில் சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க