• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சாவு: ஊழியர்கள் மீது உறவினர்கள் புகார்

February 21, 2017 தண்டோரா குழு

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் புகார் மனுவைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைகேல்ராஜ். 56 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதை அறிந்தனர்.

இதையடுத்து அதனை உறுதி செய்யவும், மேற்கொண்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவும் பிப்ரவரி 15-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 17- ம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டும் என அவரின் மனைவி அங்கு பணியாற்றிய செவிலியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு, “செவிலியர் இங்கு செயற்கை சுவாசக் கருவியில்லை. அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் சென்று 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தக் கருவியை உடனே வாங்கி வாருங்கள் “ என்று சொன்னார்கள் என்று அவரது மனைவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூச்சுத் திணறல் அதிகரித்து மைகேல்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரது மனைவியிடம் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலச்சியத்தால்தான் மைகேல்ராஜ் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் அரசு மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்பதற்காக மைகேல்ராஜ் உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனுவை அளித்தனர்.

கோவையில் அரசு மருத்துவமனையில் இது வரை பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 29 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஒருவர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க